கொலைகாரன்
நேதாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் – ஜனவரி 14, 2005… சோமசுந்தரம் காலையில் தன்னுடைய வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். அன்று கோர்ட் விடுமுறை நாள் வேறு… நேதாஜி நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தன் வீட்டு தோட்டத்துக்கு நீர் இறைத்து விட்டு டீ சாப்பிடுகையில் ‘தினத்தந்தி’யில் அரசியல் பக்க ஓரத்தில் யார் இறந்தார்கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு பிறகு முன் பக்கத்திற்கு வந்தார். சிறிய எழுத்தில் காலமானவர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது அவருடைய வழக்கமாகி விட்டது. டீ குடித்துவிட்டு வராந்தா மர நாற்காலியில் இருந்து எழுந்த போது அந்த அந்நியன் அணுகினான். எப்போதும் நாய் குரைக்கும். இன்று மீனா அதை தன்னுடன் வாக்கிங் அழைத்துப் போயிருந்தாள். போன வாரம்தான் தன் வீட்டில் பாதுகாப்புக்காக அசோக் ஏஜென்ஸியில் இருந்து ஒரு ஆள் போட்டிருந்தார். அவன் மீனாவுடன் போயிருந்தான். கவனக்குறைவான வேளை. வலுவான இரும்புக் கதவு இன்று தாளிடாமல் இருந்தது போல. அந்த அந்நியன் தள்ளித் திறந்து வந்தான். குறுகிய சமயத்தில் அவன் நடுத்தர வயது, வட்ட முகம், வெள்ளை நிறம், காலர் உள்ள சட்டை, அதனுள் புலப்பட்ட சங்கிலி. மீ...